ராவணன் - ஐஸ்வர்யாராய் விளக்கம்

வியாழன், 13 மே, 2010

            இந்தமுறை மணிரத்னத்தின் ரசிகர்கள் மட்டுமல்ல சில இந்து அமைப்புகளும் அவரது ராவணன் படத்துக்காக காத்திருக்கின்றன.

             ராமாயண கதையை இந்த காலகட்டத்துக்கு ஏற்றபடி மணிரத்னம் எடுத்திருக்கிறார் என்று சொல்லப்படுவதுதான் இதற்கு காரணம். தளபதி படம் கர்ணன், து‌ரியோதனன் நட்பை பிரதிபலித்தது போல் ராவணன் ராமாயணத்தை பிரதிபலிக்கும் என்று நம்புகிறார்கள். மணிரத்னத்தின் படத்தில் ராவணன் வேடத்தை பிரதிபலிப்பவர் - தமிழில் - விக்ரம். ஒருகட்டத்தில் அவர் கடத்தி வைத்திருக்கும் ஐஸ்வர்யா ராய் அவர் மீதே காதல் கொள்கிறார். அதாவது சீதாவுக்கு ராவணன் மீது காதல் வருகிறது. இதுதான் இந்து அமைப்புகளை உஷார்ப்படுத்தியிருக்கிறது.  இதுபோல் ஏதேனும் இருந்தால் போராட்டம் நடத்தவும் சைலண்டாக முண்டா தட்டி வருகிறார்கள்.

                   இந்நிலையில் ராவணன் குறித்து முக்கியமான விளக்கம் ஒன்றை ஐஸ்வர்யாராய் அளித்துள்ளார். இந்தப் படத்தின் கதை எல்லோரும் சொல்வது போல் ராமாயணத்தை தழுவி எடுக்கப்பட்டதல்ல. படத்துக்கு ராவணன் என்று பெயர் வைக்க, விக்ரமின் பல கோணங்களில் அமைந்த கேரக்டர்தான் காரணம். மற்றபடி ராமாயணத்துக்கும் இத‌ற்கு‌ம் எந்த தொடர்புமில்லை என்று விளக்கியிருக்கிறார். வில்லங்கத்தை எதிர்பார்த்திருப்பவர்களை இந்த விளக்கம் சமாதானப்படுத்துமா?

0 கருத்துகள்:

கருத்துரையிடுக